சுற்றுலா பயணிகள் ஷாக்..! ஏற்காடு மலை பாதையில் வாகனங்கள் செல்ல தடை!!

yercaud
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஏற்காட்டில் அதிகப்படியான மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மலைப்பாதைகள் வழியாக ஆங்காங்கே தண்ணீர் வழிந்து ஓடுகிறது. எனவே வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் பிரதான மலை சாலையில் சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''சேலத்தில் இருந்து குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் நான்கு சக்கர வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் போக்குவரத்திற்கு அக்.22 7 மணி முதல் நாளை மறுநாள் வரை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. ஏற்காடு மலைப் பாதையில் அதிக அளவிலான மழை பொழிவு இருப்பதாலும், சாலைகளில் ஆங்காங்கே பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாலும் சுற்றுலா பயணிகள் 24 ஆம் தேதி வரை ஏற்காடு வருவதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
