நகை திருடிய வாலிபர் கைது: 9 சவரன் நகை மீட்பு

நகை திருடிய வாலிபர் கைது: 9 சவரன் நகை மீட்பு

 திருடப்பட்ட வழக்கில் சிக்கிய வாலிபர்

நகை திருடிய வாலிபரை கைது செய்து 9 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கீழ்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செம்பாக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் நேற்று சின்னசேலம் காவல் ஆய்வாளர் ராஜாராமன் மற்றும் கீழ்குப்பம் உதவி ஆய்வாளர் சந்திரன் தனிப்பிரிவு போலீஸ் சரவணன் ஆகிய ஒரு தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது சந்தேகம் படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கும் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட போது அவர் சின்னசேலம் அருகே உள்ள தென் சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் சந்திரமோகன் என்பதும் இவர் நைனார்பாளையம் பேக்காடு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி வீட்டில் நகை திருடியதும் தெரியவந்தது.

பின்னர்இவரிடமிருந்து 9 சவரன் நகை மீட்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்திரமோகனை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story