10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

கோப்பு படம் 

கொலை, திருட்டு வழக்குகளில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை தனிப்படை போலீசார் கைது செய்தனா்.

புதுச்சேரியைச் சோ்ந்த இருளப்பன் மகன் ஏம்பலம் முருகன் என்ற கிருஷ்ணமூா்த்தி (50). இவா் மீதுகொலை, திருட்டு என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஆத்தூா், ஆறுமுகனேரி, குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் உள்ளனவாம்.

இவா் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துவந்தாராம். திருச்செந்தூா் நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்ததைத் தொடா்ந்து,

டிஎஸ்பி வசந்தராஜ் உத்தரவு பேரில் தனிப்படை சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தாமஸ் தலைமையிலான போலீசார் கிருஷ்ணமூா்த்தியை சேலம், கருபாபுரம் பகுதியில் கைது செய்து நீதிமன்ற நடுவா் வரதராஜன் முன் நேற்று ஆஜா்படுத்தினா்.

Tags

Next Story