காரில் கொண்டு சென்ற 198 சேலைகள் பறிமுதல்!

காரில் கொண்டு சென்ற 198 சேலைகள் பறிமுதல்!

சேலைகள் பறிமுதல்

காட்பாடி அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட 198 சேலைகளை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடி அருகே நிலை கண்காணிப்புக் குழு அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் ஆந்திர மாநிலம், திருப்பதியை சேர்ந்த சாய்பாபு என்பவர் 198 சேலைகளை கொண்டு சென்றது தெரியவந்தது.

பர்கூரில் உள்ள ஒரு துணிக்கடைக்கு கொடுப்பதற்காக அதை கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தார். அதற்கான ஆவணங்கள் இல்லாததால் சேலைகளை பறிமுதல் செய்து காட்பாடி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story