குழந்தைகளை கடத்திய 2பேர் கைது: எஸ்பிக்கு பாராட்டு!

குழந்தைகளை கடத்திய 2பேர் கைது: எஸ்பிக்கு  பாராட்டு!

எஸ்பிக்கு பாராட்டு

தூத்துக்குடியில் குழந்தைகளை கடத்திய 2பேரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட சிறப்பு இளஞ்சிறார் காவல் பிரிவு உறுப்பினர் எம்பவர் சங்கர் பாராட்டு தெரிவித்தார். 
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 21.12.2022 அன்று ஒரு 2 ½ வயது குழந்தையும், குலசேகரன்பட்டிணம் காவல் நிலை எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 21.10.2023 அன்று ஒரு 2 வயது குழந்தையும் மற்றும் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 09.03.2024 அன்று ஒரு 4 மாத குழந்தையும் காணவில்லை என சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் பெற்றோர்களால் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் மேற்படி குழந்தைகளை கடத்தியவர்களை கண்டுபிடித்து, குழந்தைகளை மீட்க பல்வேறு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்க இரவு, பகலாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படை போலீசாரை குழந்தைகளை விற்பனைக்காக கடத்திய 2பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளை விற்பனைக்காக கடத்திய 2பேரை கைது செய்ய பெரு முயற்சி எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனை தூத்துக்குடி மாவட்ட சிறப்பு இளஞ்சிறார் காவல் பிரிவு உறுப்பினர் எம்பவர் சங்கர் பாராட்டினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ் உடன் இருந்தார்.

Tags

Next Story