சேலம் செந்தில் பப்ளிக் பள்ளி வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 லட்சம் உதவி

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளி வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 லட்சம் உதவி

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளி வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 லட்சம் உதவி

பாதிககப்பட்ட மக்களுக்கு பால் பவுடர் வழங்குவதற்கு சேலம் மாநகராட்சி ஆணையாளரிடம் 2 லட்சம் அளித்தார் பள்ளியின் தாளாளர்
சென்னையில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேலம் செந்தில் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் செந்தில் பப்ளிக் பள்ளி உதவிக்கரம் நீட்டியுள்ளது. பள்ளியின் செயலாளர் கே.தனசேகர், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால் பவுடர் வழங்குவதற்காக ரூ.2 லட்சத்தை பள்ளியின் தலைமை செயல் அலுவலர் டி.சுந்தரேசன் மூலம் சேலம் மாநகராட்சி ஆணையாளர் எஸ்.பாலசந்தரிடம் வழங்கப்பட்டது. நன்கொடையை பெற்றுக் கொண்ட ஆணையாளர் எஸ்.பாலசந்தர், செந்தில் பப்ளிக் பள்ளிக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசின் முயற்சிகளுக்கு செந்தில் கல்வி அறக்கட்டளையின் பங்களிப்பு தான் இந்த நிதி என்றும், பாதிக்கப்பட்ட காலங்களில் இதுபோன்ற உதவிகளை எங்கள் அறக்கட்டளை தொடர்ந்து செய்து வருகிறது என்றும் பள்ளி செயலாளர் கே.தனசேகர் கூறினார்.

Tags

Next Story