அடுத்த ஐந்து தினங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்!
![அடுத்த ஐந்து தினங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்! அடுத்த ஐந்து தினங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்!](https://king24x7.com/h-upload/2024/03/27/455299-image3a1000413527.webp)
பைல் படம்
தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 28 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை ஏப்ரல் ஒன்று மற்றும் இரண்டாம் தேதிகளில் பெய்யக்கூடும்.
வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.