இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

பீடி இலை பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ், செல்வகுமார்,ராமச்சந்திரன், தலைமை காவலர் இருதயராஜ், ராமர், காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் இன்று திரேஸ்புரம் கடற்கரையில் அதிகாலை 03.30 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுமார் 35 கிலோ வீதம் 40 பண்டல்களில் 1400 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு 20 லட்சம் ஆகும். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகு, மினி லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக லாரி கிளீனர் மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்த தொம்மை மகன் அஜய் (24) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட பீடி இலை பண்டல்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் கியூ பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Tags

Next Story