திருவையாறு அருகே கதண்டு கடித்து 20 பேர் காயம்

திருவையாறு அருகே வீரசிங்கம்பேட்டையில் பனைமரத்தில் இருந்து கதண்டு தாக்கியதில், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வீரசிங்கம்பேட்டை, மாரியம்மன் திருக்கோவில் பின்புறம் அதிகளவில் பனைமரங்கள் உள்ளன. இந்த பனைமரங்களில் கதண்டுகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிலரை கடித்துள்ளது. இருப்பினும் அப்பகுதி மக்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை காற்று வீசியதில், பனை மரத்தில் இருந்த கதண்டுகள் கலைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவ்வழியாக சென்ற வீரசிங்கம்பேட்டை பகுதியை சேர்ந்த ராமன், (52), ராமன் மனைவி பத்மா,(47), தங்கப்பன், (42), கோவிந்தராஜ் மனைவி பிச்சையம்மாள்,(60), திருவேதிகுடியை சேர்ந்த சீனிவாசன் மகன் வெற்றிச்செல்வன்,(43), வீரசிங்கம்பேட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்த சந்தியாகு மகன் குழந்தை, (54), மேல தெரு துரை மகன் மோகன்,(43), உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்களை அடுத்தடுத்து கதண்டு தாக்கியது.

பின்னர் பொதுமக்கள், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். மேலும், காயமடைந்தவர்களை கிராமமக்கள் டூ வீலர் மூலமாக, திருவையாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கதண்டுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story