200 ஏக்கர் நெல் பயிர் நீரில் மூழ்கி சேதம்.

200 ஏக்கர் நெல் பயிர் நீரில் மூழ்கி சேதம்.

ராணிப்பேட்டை, கலவை தாலுகாவில் 200 ஏக்கர் நெல் பயிர் நீரில் மூழ்கி சேதம்.

ராணிப்பேட்டை, கலவை தாலுகாவில் 200 ஏக்கர் நெல் பயிர் நீரில் மூழ்கி சேதம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக அனைத்து பகுதிகளிலும் ஏரிகள் குளங்கள் ஆறுகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், கலவை தாலுக்காவுக்கு உட்பட்ட மாம்பாக்கம், சொரையூர், மேல் புதுப்பாக்கம், பென்னகர், வேம்பி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் சேதம் அடைந்தது.

இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் என்ன பண்ண முடியும்? இன்சூரன்ஸ் பணத்தை எங்களுக்கு தந்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story