ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் விடுதலை- இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் விடுதலை- இலங்கை நீதிமன்றம் உத்தரவு

விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 14, 28-ம் தேதிகளில் மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நான்கு விசைப்படகையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த நிலையில் சிறையில் உள்ள மீனவர்களின் சிறைக்காவல் தேதி முடிந்து இலங்கை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதனை அடுத்து 22 மீனவர்களையும் விசாரணை நடத்திய நீதிபதி 21 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ஒரு மீனவர் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு 24 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை அடுத்து இன்னும் ஒரு சில தினங்களில் விடுதலை செய்யப்பட்டு உள்ள மீனவர்கள் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story