இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையால்  கைது செய்யப்பட்ட  22 மீனவர்கள் விடுதலை

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை மனு அளித்த மீனவர் சங்கத்தினர்.

பாம்பன் பகுதியை சேர்ந்த நாட்டுப்படகுகள் நேற்று மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இரண்டு நாட்டு படகுகளையும் 22 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் விசைப்படகு மற்றும் நாட்டு படகு மீனவர் சங்கத் தலைவர்கள் நேரில் சந்தித்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கையை வைத்தனர். மீனவர்களின் கோரிக்கை அடிப்படையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொலைபேசி மூலம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இலங்கை அரசிடம் கேட்டுக் கொண்டதன் பேரில் நல்லிணக்க அடிப்படையில் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதியை சேர்ந்த இரண்டு நாட்டு படகுகளும் 22 மீனவர்களையும் விடுதலை செய்து சர்வதேச கடல் எல்லை வரை இலங்கை கடற்படையினர் அழைத்து வந்து ஒப்படைத்ததாக நாட்டுப்பாடக மீனவ சங்கத்தினர் தற்போது தெரிவித்துள்ளனர். மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட அன்றைய தினமே மத்திய அமைச்சரை சந்தித்து மீனவர் சங்கங்கள் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று உடனடியாக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டது மீனவ கிராமங்களில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story