நீட் தேர்வுக்கு எதிராக மதுரையில் 24-ந்தேதி போராட்டம்: திமுக அறிவிப்பு

நீட் தேர்வுக்கு எதிராக மதுரையில் 24-ந்தேதி போராட்டம்: திமுக அறிவிப்பு

 போராட்டம்

தி.மு.க. நேற்று நடத்திய போராட்டம் மதுரையில் மட்டும் நடைபெறவில்லை. அ.தி.மு.க. மாநாடு நடைபெற்றதாலும், போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டதாலும், மதுரையில் மட்டும் போராட்டம் நடைபெறவில்லை. இதனால் மதுரையில் வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் 24-ந்தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை அண்ணாநகர், அம்பிகா தியேட்டர் அருகில் உள்ள ரவுண்டானாவில் அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் பேராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story