சேத்துப்பட்டில் 24.05 கோடியில் பூமி பூஜை

சேத்துப்பட்டில் 24.05 கோடியில் பூமி பூஜை

சேத்துப்பட்டு பகுதியில் 24.05 கோடி செலவில் சலவைக்கூடம் கட்டுமான பணிக்கான பூமி பூஜையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.


சேத்துப்பட்டு பகுதியில் 24.05 கோடி செலவில் சலவைக்கூடம் கட்டுமான பணிக்கான பூமி பூஜையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24ஆம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் மற்றும் தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, சேத்துப்பட்டு சலவைக் கூடத்தை ரூ.24.05 கோடி மதிப்பீட்டில் மறுவளர்ச்சி செய்யும் வகையில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை மேற்கொள்ளப்பட்டு, பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பரந்தாமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரவிச்சந்திரன், சி.எம்.டி.ஏ. தலைமை திட்ட அமைப்பாளர் ருத்ரமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பா.ராஜ மகேஷ்குமார், உள்ளாட்சி பிரதிநிதி வி.சுதாகர், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பருதி இளம்சுருதி, இராஜேஷ்வரி ஸ்ரீதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story