ஆடு திருடிய 3 பேர் கைது

ஆடு திருடிய 3 பேர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே ஆடு திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

உளுந்தூர்பேட்டை அருகே ஆடு திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த மூலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. விவசாயி. ஆடுகளை வளர்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே கட்டியிருந்த ஆடுகளை நேற்று அதிகாலை 2:00 மணியளவில் பைக்கில் வந்த 3 பேர் திருடிச் சென்றனர்.

சத்தம் கேட்டு விழித்த சுப்ரமணி அப்பகுதி மக்களுடன் சேர்ந்து விரட்டிச் சென்று ஒருவரை பிடித்தார். மற்ற 2 பேரும் தப்பியோடினர். பிடிபட்ட நபரை உளுந்துார்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், உளுந்தாண்டார்கோவில் காலனி பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன், 28; என தெரிவித்தார்.

மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் தப்பியோடிய அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் அருள்நிதி, 27; செங்குறிச்சி காலனி பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி மகன் பிரேம்குமார், 28;ஆகியோரையும் கைது செய்தனர்.

Tags

Next Story