பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மாயம்

பிறந்து 30 நாட்களே ஆன  பெண் குழந்தை மாயம்

பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மாயம்

ஜெயங்கொண்டம் அருகே பிறந்து முப்பது நாட்களை ஆன பெண் குழந்தை மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மேலசம்போடை கிராமம் இருளர் தெருவை சேர்ந்தவர் சித்திரைசோழன் கட்டிட மேஸ்திரியான இவருக்கு பரிமளா(48). என்ற மனைவியும் ஐந்து மகன்களும், நான்கு மகள்களும் ஒன்பது பிள்ளைகள் உள்ளனர். இவர்களது மூத்த மகள் மஞ்சுளா (18) திருமணமாகாமல் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மஞ்சுளாவின் பெற்றோர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர் அப்போது அன்புதுரையுடன் பழகியத்தையும் நடந்தவற்றையும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கர்ப்பத்திற்கு காரணமான அதே பகுதியை சேர்ந்த உத்திராபதி மகன் அன்புதுரை (21) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையெடுத்து அவரை கைது செய்து,போகோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த வழக்கு சம்பந்தமாக அன்பு துரை சிறையிலிருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் மார்ச் 29 -ந்தேதி மஞ்சுளாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த செய்தி அறிந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் அண்மையில் அங்க அடையாளங்கள் பதிவு செய்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் மஞ்சுளா குழந்தையுடன் தூங்கி கொண்டு இருந்ததாக தெரிகிறது.அப்போது மஞ்சுளாவின் குழந்தையை மஞ்சுளா அறை தூக்கத்தில் இருக்கும்போது யாரோ மர்ம நபர் டீசர்ட் ஷார்ட்ஸ் அணிந்த ஒருவர் குழந்தையை தூக்கியதாகவும், அதை பார்த்ததாகவும் கூறியுள்ளார். சகோதரர்கள் தான் குழந்தைகளை தூக்கியதாக நினைத்து அவர் மீண்டும் தூங்கிவிட்டார் சிறிது நேரம் கழித்து அங்கு வந்த மஞ்சுளாவின் தாயார் பரிமளா வந்து பார்த்த போது குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தை காணவில்லை என்று மஞ்சுளாவிடம் கேட்ட போது குழந்தை தனது அருகில் தான் தூங்கி கொண்டு இருந்ததாக தெரிவித்தார்.

இதனால் அக்கம் பக்கத்து வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா மற்றும் அவரது தாயார் பரிமளா ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் மேலும் இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் உள்ளிட்ட தனிப்படை போலீசார் குழந்தையை யாரேனும் கடத்தி சென்றார்களா? குழந்தையை தூக்கிச் சென்றது யார்? தற்பொழுது குழந்தை நிலை என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றார்.

மேலும் ஊர் பகுதிகளில் முக்கிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் தீவிரமாக பரிசோதனை செய்து விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர். இரண்டு நாட்களாக குழந்தை பசியால் இருக்கும் பால் கொடுக்கவில்லை குழந்தைக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை என தாய் மஞ்சுளா கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது. டிஎன்ஏ பரிசோதனைக்காக திங்கள்கிழமை அன்று மஞ்சுளாவையும் மஞ்சுளாவின் குழந்தையையும் அனைத்து மகளிர் போலீசார் அழைத்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவே குழந்தை காணாமல் போய் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாயமான பெண் குழந்தையை தற்போது வரை இரவிலும் போலீசார் தீவிரமாக தேடி விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story