கதவை உடைத்து 38 சவரன் நகை திருட்டு

கதவை உடைத்து 38 சவரன் நகை திருட்டு

திருட்டு  நடந்த வீடு 

சோளிங்கர் அருகே ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 38 சவரன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் வயது 55. இவர் அதே பகுதியில் உள்ள TVS கம்பெனியில் வேலை செய்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக ரங்கநாதன் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றனர். நிகழ்ச்சி முடிந்து நேற்றிரவு வீடு திரும்பினர்.

வீட்டின் முன்பக்க கதவு பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறையில் இருந்து பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் வீட்டின் பின்பக்க கதவு உடைத்து உள்ளே வந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 38 சவரன் தங்க நகைகள் 76 ஆயிரம் பணம் மற்றும் விலை உயர்ந்த பட்டு புடவைகள் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரங்கநாதன் கொண்டபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன் பேரில் அரக்கோணம் ஏஎஸ்பி கிரீஸ் யாதவ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது. இது குறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story