தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 389.59 கோடி நிதி விரைவில் வழங்க நடவடிக்கை

தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 389.59 கோடி நிதி விரைவில் வழங்க நடவடிக்கை

மாணவர்களுக்கு 389.59 கோடி நிதி 

தனியார் பள்ளிகளில் படிக்கும் 4 லட்சத்து 17ஆயிரத்து 68 மாணவர்களுக்கு 389.59 கோடி நிதி விரைவில் வழங்க நடவடிக்கை.
குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் படித்து வரும் 4 லட்சத்து 17 ஆயிரத்து 68 மாணவர்களுக்கு 383.59 கோடி நிதி பள்ளிகளுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது, என தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ முருகன் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கல்வி உரிமைச் சட்டம், 2009 - இன் படி, அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் குறைந்தபட்சம் 25 சதவீதம் இட ஒருக்கீட்டின் கீழ் சேர்க்கையானது தமிழகத்தில் சீரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 2022-23ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட 65,946 குழுந்தைகள் மற்றும் தொடர்ந்து பயின்று வரும் குழந்தைகள் 3 லட்சத்து 51 ஆயிரத்து 122 சேர்த்து மொத்தம் 4 லட்சத்து 17 ஆயிரத்து 68 மாணவர்களின் விவரங்களை மாவட்டங்களில் சரிபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு ஈடு செய்யும் தொகை ரூ.383.69 கோடி அரசால் வழங்கப்பட்டுள்ளது. அத்தொகையினை விரைவாக பள்ளிகளுக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2023-24 ஆம் கல்வியாண்டில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 400 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் தகுதியுள்ள 70 ஆயிரத்து 883 குழந்தைகள் சேர்க்கப்பட்டு படித்து வருகின்றனர். 2024- 2025 ஆம் நிதியாண்டில் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டபின் இதற்கான கல்விக்கட்டணம் தனியார் பள்ளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறியுள்ளார்.

Tags

Next Story