கிரிவலப்பாதையில் சுவாமி ரமணானந்தாவின் 3ம் ஆண்டு குருபூஜை

கிரிவலப்பாதையில் சுவாமி ரமணானந்தாவின் 3ம் ஆண்டு குருபூஜை
பூஜை
கிரிவலப்பாதையில் சுவாமி ரமணானந்தாவின் 3ம் ஆண்டு குருபூஜை நடைபெற்றது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சுவாமி ரமணானந்தாவின் 3ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கிரிவலப்பாதை பாதை அடி அண்ணாமலை கிராமத்தில் ஓம் நகரில் நடைபெற்ற இந்த குருபூஜையில் சுவாமி ரமணானந்தாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இந்த பூஜைகளை திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் சாந்தி விஜயன் நடத்தினார். அதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் விழா குழுவைச் சேர்ந்த வி.ரகுநாதன், வி. ம் கே.உமாமகேஸ்வரி, எம். கைலாஷ் மற்றும் யாழினி, சரண்யா, ரிஷ்வந்த், ரமணானந்தாவின் சீடர்கள் ராமஜெயஎம்.நடராஜன், நிர்விருதானந்தா பொதுமக்கள் சுவாமி மற்றும் கலந்து கொண்டனர். அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 20ந்தேதி சுவாமி ரமணானந்தாவின் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story