4 வகையான ஐஸ்கிரீம் விலை உயர்வு - ஆவின் நிர்வாகம்

4  வகையான ஐஸ்கிரீம் விலை  உயர்வு - ஆவின் நிர்வாகம்

ஆவின் ஐஸ்கிரீம்

இடுப்பொருட்களின் விலை உயர்வால் நான்கு வகையான ஐஸ்கிரீம்களின் விலையை உயர்த்த உள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து பொதுமக்களுக்கும் ஏற்ற வகையில் தரமான முறையில் ஆவின் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பால் விற்பனையில் செய்து வருகிறது.. ஆவின் நிறுவனம் பல்வேறு வகையான பால் உப பொருட்கள் தரமான முறையில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி சுவைக்கும் சுமார் 100 வகையான ஐஸ்கிரீம்கள் ஆவின் நிர்வாகம் விற்பனை செய்து வருகிறது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கோடை காலத்தில் கூடுதலாக 20% விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடுப்பொருட்களின் விலை சற்று உயர்ந்துள்ளதால் தற்பொழுது நான்கு வகையான ஐஸ்கிரீம் விலையை மட்டுமே ஆவின் நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளது.

Tags

Next Story