நாளை கடைசி நாள்

நாளை கடைசி நாள்

பேராசிரியர் பணி

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர்கள் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய நாளை கடைசி நாள், திருத்தம் செய்ய 19 ஆம் தேதி இறுதி நாளாகும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர்கள் காலிப் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை கடந்த மார்ச் 14-ஆம் தேதி வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்கள் இணைய வழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய நாளை மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விண்ணப்பதாரர்கள் தங்களது இணைய வழி விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் அவகாசம் வழங்க கூறியதன் அடிப்படையில் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் நாளை மறுநாள் முதல் வருகிற 19-ஆம் தேதி மாலை 5 மணி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் மேற்கொள்ளும் போது கீழ்காணும் வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக பின்பற்ற அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. இணைய வழி விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வு கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை திருத்தம் செய்து புதுப்பித்தவுடன் கடைசி பக்கத்தில் உள்ள சமர்ப்பி பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் மாற்றங்களை செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு எந்த மாற்றமும் ஏற்றுக்கொள்ள இயலாது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story