துரைப்பாக்கத்தில் 448 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை துரைப்பாக்கத்தில் 448 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை துரைப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விநியோகம் நடைபெற்று வருவதாக துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. ரகசிய தகவலை தொடர்ந்து துரைப்பாக்கம் செக்ரடியேட் காலனி 5 ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்த பின் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த 47 வயதான தாமஸ், கண்ணகி நகர் எழில் நகரை சேர்ந்த 33 வயதான ரகு, துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த 30 வயதான காவல் நிலையத்தில் ஊர் காவல் படை பணி புரியும் குணசேகரன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

பின்னர் வீட்டில் இருந்த தடை செய்யப்பட்ட 448 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் குட்கா பொருட்களை விற்பனை செய்ய பயன்படுத்திய ஹோண்டா சிட்டி கார், ஒரு ஆட்டோ, ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

Tags

Next Story