இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது

இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது

கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 

தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்தது.

ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை மீனவர்கள் 5 பேரை படகுடன் இந்திய கடலோர காவல்படை கைது செய்தனர். இவர்களை விசாரணைக்காக தமிழக கடலோர காவல் குழுமம் போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீன் பிடிப்பதற்காக எல்லை தாண்டி வந்தார்களா அல்லது வேறு ஏதும் கடத்தல் பொருள் கொண்டு வந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் அவர்களை விசாரணை நடத்த உள்ளனர்.

Tags

Next Story