பழனியில் ரூ.5.39 கோடி காணிக்கை

பழனியில் ரூ.5.39 கோடி காணிக்கை

பக்தர்கள் சூழ் பழனி

பழனி மலைக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த 22 நாட்களில் உண்டியல் காணிக்கையாக 5கோடியே 39 லட்சம் ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், பழனி முருகனுக்கு காணிக்கை செலுத்த வசதியாக மலைகோவில் உட்பட பல்வேறு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பக்தர்களால் செலுத்திய காணிக்கைகளால் நிறையும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். இதில் ரொக்கமாக 5கோடியே 39லட்சத்து 72ஆயிரத்து 368ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 680கிராமும், வெள்ளி 25ஆயிரத்து 992கிராமும், வெளிநாட்டு கரன்சி 854நோட்டுகளும் வருவாயாக கிடைத்துள்ளது.

Tags

Next Story