குன்னூர் அருகே சிறுத்தை தாக்கியதில் 6 பேர் காயம்

குன்னூர் அருகே  சிறுத்தை தாக்கியதில் 6 பேர்  காயம்

சிறுத்தை இருக்கும் குடியிருப்பில் பாதுகாப்பு 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நள்ளிரவு வனப் பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை புரூக்லேண்ட் பகுதியில் உள்ள விமலா என்பவர் வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து நுழைந்தது. தீயணைப்பு துறைக்கு அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் மீட்க செல்லும்போது வீரர்கள் 4 பேரைச் சிறுத்தை தாக்கி காயப்படுத்தியது. மீண்டும் இன்று காலை சப்தம் ஏதும் இல்லாததால் சிறுத்தை சென்று இருக்கும் என நினைத்து உள்ளே சென்ற வருவாய்துறை, தீயணைப்பு துறையினர் உட்பட 2 பேரை தாக்கியதால் அவர்களும் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க்கப்பட்டுள்ளனர்.சிறுத்தை உள்ளே இருப்பதால் குடியிருப்பை பூட்டி தற்போது யாரும் உள்ளே செல்லாமல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிறுத்தை தாக்குதலால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags

Next Story