அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது

அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட படகு 

இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 7 மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்து படகை பறிமுதல் செய்தனர்.

இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான வைபவ் என்ற கப்பல் மூலம் கடலோர காவல் படையினர் இந்திய கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது கன்னியாகுமரி அருகே உள்ள கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து இலங்ககையை சேர்ந்த ஒரு மீன்பிடி படகு மீன்பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்தனர் இதைத்தொடர்ந்து அந்த மீன்பிடி படகை சுற்றி வளைத்த இந்திய கடலோர காவல் படையினர் அந்த படகில் இருந்த இலங்கையைச் சேர்ந்த ஏழு மீனவர்களை கைது செய்ததுடன் படகையும் பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் மற்றும் படகை இன்று காலை தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடற்கரைக்கு கொண்டு வந்து கடலோர காவல் படையினர் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையிடம் ஒப்படைக்க உள்ளனர். இதை அடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் க்யூ பிரிவு போலீசார் மீன்வளத் துறையினர் ஆகியோர் விசாரணை நடத்திய பின்பு அவர்கள் மீன்பிடிக்க வந்தார்களா அல்லது வேறு ஏதேனும் கடத்தலில் ஈடுபட வந்தார்களா என்பது தெரியவரும்.

Tags

Next Story