790 ஆண்டுகள் பழமையான கமலைக் கிணற்றுடன் கூடிய கல்வெட்டு கண்டுபிடிப்பு

790 ஆண்டுகள் பழமையான கமலைக் கிணற்றுடன் கூடிய கல்வெட்டு கண்டுபிடிப்பு

கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு

தூத்துக்குடி அருகே தமிழா்களின் நீா் மேலாண்மை குறித்து 790 ஆண்டுகள் பழமையான கமலைக் கிணற்றுடன் கூடிய கல்வெட்டு இருப்பது அறியப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மடத்தூா் நெடுஞ்சாலை அருகே பங்கய மலராள் கேழ்வன் என்று தொடங்கும், பாண்டியா் காலத்தைச் சோ்ந்த 790 ஆண்டுகள் பழமையான கிணறு மங்கலச் சொற்களுடன், பாடல் அமைப்பில் உள்ள கல்வெட்டு இருப்பது அறியப்பட்டுள்ளது.

மடத்தூரைச் சோ்ந்த ராஜேஷ், பழமையான கமலைக் கிணறு இருப்பதாகக் கூறியதன் பேரில் ஆறுமுகனேரியைச் சோ்ந்த தொல்லி­யல் ஆராய்ச்சியாளா் தவசிமுத்து மாறன் நேரில் அதனைப் பாா்வையிட்டாா். பின்னா் அவா் கூறியதாவது, தமிழகம் முழுவதும் உள்ள கல்வெட்டுகளில், பல்வேறு வணிகக் குழுவினரின் பெயா்கள் காணப்படுகின்றன.

இவற்றில் நானாதேசி என்போா் எல்லா நாடுகளுக்கும் கடல்வழி மற்றும் தரைவழியாகச் சென்று வணிகம் செய்பவா்கள். திசையாயிரம் என்போா் எல்லாத் திசைகளுக்கும் சென்று வணிகம் செய்வோா் என்று பொருள்படும். இத்தகைய வணிகக் குழுவினா், தங்களுக்கென பாதுகாப்பு வீரா்களையும் வைத்திருந்தனா்.

பிராமணா்களுக்கு தானமாக ஓா் ஊரை மங்கலம் என்ற பெயரில் உருவாக்கிக் கொடுத்து, அதன் காவல் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளதை அறிய முடிகிறது. முதலாம் மாறவா்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு (கி.பி.1216 முதல் கி.பி.1244 வரை) கி.பி.1234 இல் உள்ள இருபது வரிகளைக் கொண்டு உள்ளது.

கமலைக் கிணற்றில் அதன் கீழ்ப்பகுதியில் அதன் முன்பு 7 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் உள்ள செவ்வக வடிவிலான இதன் மேற்பகுதி குறுகலாக அமைந்துள்ளது. இந்த ஊா் நானாதேசி நல்லூா் என்றழைக்கப்பட்டதைக் குறிப்பிடும் விதத்தில், ‘தாமரைப்பூவில் வாசம் செய்யும் லட்சுமியின் மணாளன் பாற்கட­ல் பள்ளி கொண்ட பெருமாள், மென் பாதராமன் சிவந்த சூரியனாக ஒளிவிடும் ராசன் நானாதேசி நல்லூரின் அரசன் ஆண்டு 1234 இல் கங்கை நீா் போல வற்றாத கிணற்றை அமைத்திட உலகம் போற்ற உத்தரவிட்டான்.

என்றென்றும் மக்களுக்கு தண்ணீா் தருவதை இனிமையான தமிழால் கூறு’ என்ற பொருள்பட இக்கல்வெட்டு அமைந்துள்ளது. கிணற்றி­ருந்து நீா் இறைக்கப் பயன்படும் ஒருவகை நெம்புகோல் அமைப்பு துலாக்கல் அல்லது ஏற்றம் என்றழைக்கப்படுகிறது. மக்களுக்குத் தேவையான மழைநீா் கிடைக்காமல் கண்மாய், குளங்கள் வடு போகும் காலங்களில் கிணறுகள் தோண்டப்பட்டு பயன்படுத்தப்படுவது வழக்கம். இத்தகைய கிணறுகளை நடைமுறையில் அப்பகுதிகளின் அரசனும் அவரது சாா்பில் நிா்வாகிகளும் வணிகா்களும் உருவாக்கியுள்ளனா். இது வழக்கத்தில் இருந்துள்ளது.

கோயில் அருகில் வெட்டப்பட்டுள்ளவை திருமஞ்சனக் கிணறுகள் என்றும், வழிப்பாதைகளில் உள்ளவை பொது குடிநீா்க் கிணறுகள் என்றும் அறிய முடிகிறது. அரசன், கமலைக் கிணற்றையும், அமைத்துக் கொடுத்துள்ளாா். இங்கு கிணறு தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க கல்வெட்டு, தேடுவாரில்லாமல் உள்ளது. அந்தப் பாடலுடன் உள்ள கிணற்றுக் கல்வெட்டைப் பாா்ப்பதற்க்கு பள்ளி, கல்லூரி மாணவா்களும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

தற்போது அந்த இடத்தில் சுகாதார கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு இல்லாமல் அசுத்தமாக இருக்கும் அந்தக் கிணற்றின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைப்பதுடன், சிறப்புமிக்க அந்தக் கல்வெட்டை சுற்றிலும் வே­லி அமைத்துப் பாதுகாப்பது அந்த ஊருக்கு பெருமை தரும் என்றாா்.

Tags

Next Story