பூத் சிலிப் அச்சடிக்கும் பணி 80 சதவீதம் நிறைவு!

பூத் சிலிப் அச்சடிக்கும் பணி 80 சதவீதம் நிறைவு!

வேலூர் 

வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்களுக்கான பூத் ஸ்லிப் அச்சடிக்கும் பணி 80 சதவீதம் நிறைவடைந்ததாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்
வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்களுக்கான பூத் சிலிப் காஞ்சீபுரத்தில் உள்ள அச்சகம் ஒன்றில் அச்சடிக்கப்பட்டு வருகிறது. 80 சதவீத பூத் சிலிப் அச்சடிக்கப்பட்டுவிட்டன. பூத் சிலிப்பில் வாக்காளர்களின் பெயர், தொகுதி, வரிசை எண், பாகம் எண் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருக்கும். தாலுகா வாரியாக பூத் சிலிப் அனுப்பி வைக்கப்பட்டு, அவை வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் வீடு, வீடாக வழங்கப்படும். பூத் சிலிப் வழங்கும் சமயத்தில் வெளியூர் சென்றவர்கள் வாக்குப்பதிவு தினத்தில்கூட அதனை பெற்றுக்கொள்ளலாம். பூத் சிலிப்பில் வாக்காளரின் புகைப்படம் இடம்பெறாது. அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story