ராணிப்பேட்டை அருகே சிறுமிக்கு ஆபாசம் படம் காட்டிய வாலிபர் கைது

ராணிப்பேட்டை அருகே சிறுமிக்கு ஆபாசம் படம் காட்டிய வாலிபர் கைது

காவல் நிலையம்


ராணிப்பேட்டை அருகே சிறுமிக்கு ஆபாசம் படம் காட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.``

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நவாப் கோட்டை தெருவை சேர்ந்தவர் சலீம்பாஷா(37). இவர் அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி தனது தங்கையின் ஆசிரியை ஒருவரது வீட்டிற்கு விளையாட சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டில் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு தனது செல்போனில் ஆபாச படம் பார்த்து கொண்டிருந்த சலீம்பாஷா என்பவன் அதனை சிறுமிக்கு காட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இது குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியதை தொடர்ந்து, இது தொடர்பாக பெற்றோர்கள் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மகளிர் போலீசார் சலீம்பாஷாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story