மூன்று மாத குழந்தை குப்பைத் தொட்டியில் வீசிய கொடூர தாய்

மூன்று மாத குழந்தை குப்பைத் தொட்டியில் வீசிய கொடூர தாய்

 மூன்று மாத குழந்தை குப்பைத் தொட்டியில் வீசிய கொடூர தாய்

மதுரவாயலில் மூன்று மாத குழந்தை குப்பைத் தொட்டியில் வீசிய கொடூர தாய் கைது.
மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் தனலட்சுமி நகர், 6 வது தெருவை சேர்ந்தவர் அஞ்சலி (25), இவருக்கு திருமணமாகி 3 மாத ஆண் குழந்தை உள்ளது இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்தபோது வாடகைக்கு வீடு கேட்பது போல் வந்தவர்கள் குழந்தையை கடத்தி சென்று விட்டதாக போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த போது தனது குழந்தையை பூந்தமல்லியில் உள்ள உறவினர் வீட்டிற்கு கொடுத்துவிட்டதாக கூறினார். அங்கு சென்று பார்த்தபோது அவர் கூறியது பொய் என தெரியவந்தது. பின்னர் குழந்தையை குப்பை தொட்டியில் போட்டு விட்டதாக முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார். இதனையடுத்து மதுரவாயல் போலீசார் மோப்பநாய் உதவியுடன் கடந்த மூன்று தினங்களாக பெருங்குடி குப்பை கிடங்கில் தீவிரமாக குழந்தையை தேடி வந்தனர். இந்த நிலையில் குழந்தை கிடைக்காததால் அவரது தாயை கைது செய்தனர். மூன்று மாத குழந்தையை தாயே குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு காணவில்லை என புகார் அளித்து மூன்று நாட்களாக போலீசார் தேடியும் குழந்தை கிடைக்காத சம்பவத்தில் தாயை போலீசார் கைது செய்திருக்க கூடிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story