கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு!

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு!

மான் 

காட்டுப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த மான் திமிரி அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்தது.புள்ளி மான் கயிறு கட்டி பத்திரமாக மீட்டு அருகில் இருந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த கும்பம் ஊராட்சி பகுதியில் மலைகள், காடுகள் நிறைந்துள்ளன.காட்டுப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடிவந்த மான் ஒன்று குப்பம் பாரதிநகரை சேர்ந்த பெருமாள் என்பவரின் விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதை அறிந்த பெருமாள் அருகில் இருந்த ஊர் பொது மக்களுக்கு தகவல் தெரிவித்து, பொதுமக்களின் உதவியுடன் புள்ளி மான் கயிறு கட்டி பத்திரமாக மீட்டு அருகில் இருந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

Tags

Next Story