கோவில்பட்டி அருகே மர குச்சி குடோனில் தீ விபத்து

கோவில்பட்டி அருகே மர குச்சி குடோனில் தீ விபத்து
தீ விபத்து
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மர குச்சி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் பகுதியில் மணிமாறன் என்பவருக்கு சொந்தமான சாய்ராம் தீப்பெட்டி கம்பெனிக்கு தேவையான மூலப் பொருட்களான மரக்குச்சிகள், தீப்பெட்டி அட்டைகள் வைக்கும் குடோன் உள்ளது.இந்நிலையில் இன்று லாரியில் வந்த மரக்குச்சிகளை ஊழியர்கள் குடோனில் இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது குடோனில் இருந்து தீ புகை வந்துள்ளது . உடனடியாக உரிமையாளருக்கு மற்றும் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் அங்கு மூட்டையில் வைக்கப்பட்டிருந்த மரக் குச்சிகள், தீப்பெட்டி அட்டைகள் பெரும்பாலும் தீயில் கருகி சாம்பலானது. இந்த சம்பவம் குறித்து மேற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story