வேலூரில் கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது

வேலூரில் கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது

காவல் நிலையம்

வேலூர் பேருந்து நிலையத்தில் வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்தவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் பாகாயம் வாணர் தெருவை சேர்ந்தவர் ராபின் (வயது 32). இவர் சம்பவத்தன்று வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த மேட்டுஇடையம்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த படையப்பா (25) என்பவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ராபினிடம் இருந்து ரூ.1000-ஐ பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த ராபின் இது குறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து படையப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story