வி.கைகாட்டியில் தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் 

வி.கைகாட்டியில் தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் 

நிர்வாகிகள் கூட்டம் 

வி.கைகாட்டியில் தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அரியலூர் ஒன்றிய தலைவர் தங்கமலர் துரை மாணிக்கம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மாரியப்பன், மாவட்ட பொருளாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் நடனசபாபதி, மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாநில தலைவர் அறவாழி மாநில பொருளாளர் ஜோதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.கூட்டத்தில் தூய்மைபணியாளர்கள்,தூய்மை காவலர்களுக்கான ஊதியம் பிரதிமாத 5ம் தேதிக்குள் நேரடியாக ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் வழங்க வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களின் ஊதியத்தை சிறப்பு காலமுறை ஊதியத்தில் நிர்னையம் செய்து அதன் நிலுவைதெகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாவட்ட துணைத்தலைவர் சாமிதுரை நன்றி கூறினார்.

Tags

Next Story