காதலியுடன் அடிக்கடி தகராறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வடமாநில வாலிபர் !!

காதலியுடன் அடிக்கடி தகராறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வடமாநில வாலிபர் !!
சங்கரன்கோவில் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை

கோழி பண்ணை அருகே உள்ள மரத்தில் வடமாநில வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தங்காடிகுப்பம் கிராம பகுதியில் உள்ள தனியார் கோழி பண்ணையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த துளசிராம் பகாரியா (வயது 23) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இதற்கு இடையே துளசிராம் பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது சமீப காலமாக காதலியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட துளசிராம் பகாரியா நேற்று மாலை கோழி பண்ணையில் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி அப்பகுதியினருக்கும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story