கள்ள சந்தையில் விற்பனைக்காக மதுபானம் வைத்திருந்தவர் கைது

கள்ள சந்தையில் விற்பனைக்காக மதுபானம் வைத்திருந்தவர் கைது

மதுவிற்பனை செய்தவர் கைது

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே கள்ளச் சந்தையில் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவை அடுத்த ஒதியத்தூர் பகுதியில் வெளி மார்க்கெட்டில் மதுபானம் விற்பதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்காணித்தனர். ஒரு இடத்தில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 92 குவாட்டர் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுபானத்தை பதுக்கி வைத்திருந்ததாக ஒதியத்தூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தண்டபாணியின் மகன் தமிழரசன் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story