லத்தேரி அருகே போலீஸ்காரர் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து பலி

லத்தேரி அருகே போலீஸ்காரர் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து பலி

பலியான காவலர்

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே போலீஸ்காரர் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம், லத்தேரியை அடுத்த கனகசமுத்திரம் பகுதியில் உள்ள கிணற்றில் நேற்று காலையில் ஒரு ஆண் பிணமாக மிதந்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக லத்தேரி போலீசுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், கிணற்றில் கிடந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் குடியாத்தம், கொண்டசமுத்திரம், புதுத்தெருவைச் சேர்ந்த வேலாயுதம் மகன் ஸ்ரீதர் (39) என்பதும், காட்பாடியை அடுத்த சேவூரில் உள்ள சிறப்பு பட்டாலியன் பிரிவில் டிரைவராக (போலீஸ்) பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது.

இவர் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு சேவூரில் இருந்து ஊருக்கு சென்றுள்ளார். வழியில் கனகசமுத்திரம் பகுதியில் சிறுநீர் கழிக்க சாலை ஓரமாக நின்றபோது, பக்கத்தில் இருட்டில் இருந்த தரைகிணற்றில் இரவு 2.30 மணி அளவில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்துள்ளார்.இதுகுறித்து லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story