குவைத் தீ விபத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு

குவைத் தீ விபத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு

தீ விபத்தில் உயிரிழந்த ராமு

குவைத்தில் 25 ஆண்டுகள் வேலை பார்த்து நிறைவு செய்து சொந்த ஊர் திரும்பும் நிலையில் தீ விபத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் உயிரிழந்தார், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் இவரின் மகன் ராமு 65 வயது இவர் குவைத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணியாற்றி வந்தார் தொடர்ச்சியாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார் இந்நிலையில் அவர் பணி நிறைவு செய்து அதற்கான தொகையை பெற்றுக்கொண்டு சொந்த ஊர் செல்வதற்காக தயார் நிலையில் இருந்தார்.

பயண டிக்கெட் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் ஒரு வாரத்தில் ஊருக்கு வர வேண்டியவர் குவைத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதை அறிந்த ராமுவின் குடும்பத்தினர் பரிதாபமாக கண்ணீர் விட்டு கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது அவரின் மனைவி குருவம்மாளுக்கு இந்த சம்பவம் தெரிவிக்கப்படவில்லை. இவரின் உடலை ராமநாதபுரம் கொண்டுவர மத்திய மாநில அரசுகளுக்கு ராமுவின் மகன் சரவணகுமார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

தன்னுடைய தந்தையை நேரில் தான் பார்க்க முடியவில்லை, உடலையாவது பார்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ராமுவிற்கு சரவணகுமார் என்ற மகனும் சத்யா என்ற மகளும் உள்ளனர்.

Tags

Next Story