காரை பந்தாடிய ஒற்றைக் காட்டு யானை

நீலகிரி மலைபாதையில் காரை பந்தாடிய ஒற்றைக் காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மலைபாதையில் கடந்த 10 நாட்களாக ஒற்றை காட்டுயானை உலா வருகிறது இந்நிலையில் மேல் தட்டப்பள்ளம் பகுதியில் வாகனங்கள் போக்கு வரத்து நெரிசலால் மேட்டுப்பாளையம் செல்ல முடியாமல் அணிவகுத்த நிலையில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற மாருதி ஸ்விப்ட் காரை ஒற்றை யானை சேதப்படுத்தியது. இதனை முன்னாள் இருந்த வாகன ஓட்டிகள் வீடியோ பதிவு செய்தனர். காரில் பயணித்தவர்கள் காரை விட்டு தப்பி ஓடியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது, கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சமீப காலமாக காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்கதையாக உள்ளது. சம்பவம் நடந்த மேல்தட்டப் பள்ளம் பகுதியில் காட்டு யானை ஏற்கனவே பேருந்து கண்ணாடியை உடைத்தது குறிப்பிடத்தக்கது. வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வாகனங்களை பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்த வேண்டும் என்றும் கோத்தகிரி வனத்துறையினர் நாள்தோறும் கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் ரோந்து பணியை தொடர வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story