மருதாணிக்காக தற்கொலை செய்து கொண்ட மாணவி

மருதாணிக்காக தற்கொலை செய்து கொண்ட மாணவி

தற்கொலை

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் மருதாணி வைக்கவில்லை என்ற காரணத்துக்காக மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் நந்தகுமார்-சுதா. இவர்களது மகள் சேஷவர்ஷினி (13). இவர், குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பெற்றோரிடம் கைகளுக்கு மருதாணி வைக்க சொல்லி உள்ளார். ஆனால், அவர்கள் மருதாணி வைக்கவில்லை, எனக் கூறப்படுகிறது. இதனால் கோபித்துக் கொண்டு சேஷவர்ஷினி வீட்டில் உள்ள அறைக்கு சென்று உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு, மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார். வீட்டில் இருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேஷவர்ஷினியை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த டாக்டர்கள், சேஷவர்ஷினி ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர். இதுகுறித்து பரதராமி போலீசார் தற்கொலை வழக்காகப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். மருதாணி வைக்கவில்லை என்ற காரணத்துக்காக மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story