சேலையூரில் பிரியாணி கடையில் பயங்கர தீ விபத்து

சேலையூரில்  பிரியாணி கடையில் பயங்கர தீ விபத்து

தீ விபத்து

தாம்பரம் சேலையூர் காவல் நிலையத்திற்கு அருகே புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் தீ விபத்து ஏற்ப்பட்டது.
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் நிலையத்திற்கு அருகே பி ஆர் எஸ் என்ற பெயரில் பிரியாணி கடை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதிதாக திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் திடீரென பிரியாணி கடையில் தீப்பிடித்தது. பணியாளர்கள் யாரும் கடைக்கு வராத நிலையில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் காவல்துறையினர் அருகில் யாரும் சென்று விடாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Tags

Next Story