சேலம் அருகே மல்லூரில் காய்கறி வியாபாரி மர்ம சாவு

சேலம் அருகே மல்லூரில் காய்கறி வியாபாரி மர்ம சாவு

கோப்பு படம்


சேலம் அருகே மல்லூரில் காய்கறி வியாபாரி மர்மான முறையில் உயிரிழந்தார்

சேலம் மாவட்டம் மல்லூர் வேங்காம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (39) இவர் அங்கு காய்கறிகடை நடத்தி வந்தார். இவர் நேற்று பணமரத்துப்பட்டி சந்தைக்கு காய்கறி வாங்க சென்றார். அதன் பின்னர் வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தார்கள். இதனிடையே பணமரத்துப்பட்டி பிரிவு அருகே வண்டி தனியாக நின்றது. அருகில் சாலையோரம் கார்த்தி மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதையடுத்து உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த மல்லூர் போலீசார் கார்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் கார்த்தி சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவித்து கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அதன் பிறகு அதிக மது குடித்துள்ளார் இதனால் வலிப்பு நோய் ஏற்பட்டு இறந்தது தெரிய வந்தது. இது குறித்து உறவினர்களுக்கு புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story