தஞ்சாவூரில் திடீரென வெடித்து சிதறிய வாஷிங் மெஷின்

தஞ்சாவூரில் திடீரென வெடித்து சிதறிய வாஷிங் மெஷின்
வாஷிங் மெஷின் வெடித்து சிதறியது
தஞ்சாவூரில் திடீரென வெடித்து சிதறிய வாஷிங் மெஷின் பரபர்ப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் கீழவாசல் கவாஸ்காரர் தெருவை சேர்ந்தவர் சிவகிரிநாதன். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர் நேற்று காலை வழக்கம் போல் துணிகளை வாஷிங்மெஷினில் போட்டு விட்டு, சுவிட்ச் ஆன் செய்துவிட்டு, பால் வாங்குவதற்காக கடைக்குச் சென்றார். அப்போது அவரது கணவர் சிவகிரிநாதன் அறையில் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாஷிங் மெஷின் திடீரென வெடித்து சிதறியது. இதனால் தீ அங்கிருந்து பரவத் தொடங்கியது.

இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து மின் இணைப்பைத் துண்டித்து தீயை அணைத்தனர். இதில் வீட்டிலிருந்த மின்விசிறி உள்ளிட்ட சில பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. மின் கசிவு காரணமாக வாஷிங் மெஷின் வெடித்து சிதறி இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story