ஜெயங்கொண்டத்தில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய  பெண் கைது

ஜெயங்கொண்டத்தில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய  பெண் கைது

ஜெயங்கொண்டத்தில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய  பெண்ணை போலீசார் கைது செய்தனர்.


ஜெயங்கொண்டத்தில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய  பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர், ஜெயங்கொண்டத்தில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்ணை போலிசார் கைது செய்தனர் விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரது மனைவி சந்திரா (43) இவர் தனது வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பேரில் போலீசார் சந்திரா வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது அங்கு உடையார்பாளையம் சிதம்பரம் இலையூர் பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது இதையடுத்து சந்திராவை கைது செய்து பாலியல் தொழில் ஈடுபட்ட மூன்று பெண்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போலிசார் அவர்கள் மீது வழக்குப் பதிந்து இதுபோன்ற செயல்களில் இனிமேல் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.

மேலும் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சந்திரா மீது போலீசார் வழக்கு பதிவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சந்திராவிடம் இருந்து 3100 ரொக்கமும், மது பாட்டில்கள், காண்டம் உள்ளிட்டவைகளை போலிசார் பறிமுதல் செய்தனர். மேலும் சந்திரா மீது ஏற்கனவே மூன்று விபச்சார வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போலீசார் விசாரணையில் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் அரசியல்வாதிகளுக்கு அவ்வப்போது அவர்கள் கேட்கும் நேரத்தில் அவர்களது இடத்திற்கு சந்திரா புதுசு புதுசாக பெண்களை விருந்தாக்கியுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் சந்திராவிற்கு உடந்தையாக இருந்த சிலரையும் போலீசார் தேடி விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story