அரசு பள்ளிகளில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கி வைப்பு

அரசு பள்ளிகளில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கி வைப்பு

அரியலூர் அரசு பள்ளிகளில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.


அரியலூர் அரசு பள்ளிகளில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் ஆதார் அட்டை, புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கி வைப்பு அரியலூர், ஜூன் 10- அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளிலேயே மாணவர்களுக்காக ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் எடுக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது. இதற்காக அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், முகாமை தொடக்கி வைத்து, மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கி தெரிவித்தது: முகாமில் 5 வயதுக்குள் உட்பட்ட மாணவர்களுக்கு புதிய ஆதார் பதிவு செய்யப்பட உள்ளது.

5 முதல் 7 வயது வரை கட்டாய பயோமெட்ரிக் பதிவு மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் ஆதார் பதிவு மேற்கொண்ட 15 வயது முதல் 17 வயதுடைய மாணவர்களுக்கு மீண்டும் நிலையான பயோமெட்ரிக் தகவல்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். 7 வயதுக்கு மேற்பட்ட 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் பதிவுகள் இம்முகாமில் செய்யப்படவுள்ளது. ஆதார் பதிவின்போது முகம், கைரேகைகள், கருவிழி ஆகியவற்றை பதிவு செய்வதுடன் பிறந்த தேதி, பெயர், முகவரி, அலைப்பேசி எண் உள்ளிட்ட திருத்தங்களை எவ்வித கட்டணமின்றி அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு மேற்கொள்ளலாம்.

எனவே இந்த ஆதார் முகாமினை ஆதார் எண் புதுப்பித்தல் அல்லது ஆதார் புதியதாக எடுத்து கொள்வதற்கு மாணவர்களும், பெற்றோர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியலூர் நகர் மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(பொ) சி.சுவாமி முத்தழகன், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர் வட்டாட்சியர் ஆனந்தவேல், மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன் மற்றும் எல்காட் நிறுவன பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story