தலைமறைவான கொத்தனார் போக்சோவில் கைது !

தலைமறைவான கொத்தனார் போக்சோவில் கைது !

கைது

ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவாக இருந்த கொத்தனாரை போலிசார் கைது செய்தனர்.
அரியலூர், ஏப்.3- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொக்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு (27) கொத்தனாரான இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். தற்பொழுது அந்த சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கர்ப்பத்தை கலைத்து விட்டு ராஜு தலைமறைவானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிவிட்டு தலைமாறாக இருந்த ராஜு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து தேடிவந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராஜுவை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story