அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த ஏசி சண்முகம்!

வேலூர் மக்கான் சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரும், புதிய நீதிக் கட்சித் தலைவருமான டாக்டர் ஏசி சண்முகம்வேலூர் மக்கான் பகுதியில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கேக் வெட்டி அனைவருக்கும் கேக் வழங்கினார்.

Tags

Next Story