நடிகர் விஷால் தாக்கல் செய்த வழக்கு

நடிகர் விஷால் தாக்கல் செய்த வழக்கு

லைகா

நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை தனக்கு செலுத்த லைகா நிறுவனத்திற்கு உத்தரவிடக்கோரி நடிகர் விஷால் தாக்கல் செய்த வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை தனக்கு செலுத்த லைகா நிறுவனத்திற்கு உத்தரவிடக்கோரி நடிகர் விஷால் தாக்கல் செய்த வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலுவை ஜிஎஸ்டி தொகையான ரூ. 5.24 கோடியை வழங்க லைகாவிற்கு உத்தரவிடக்கோரி நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார். விஷாலின் வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பக்கோரி லைகா நிறுவனம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ஒப்பந்தத்தின் அசல் ஆவணங்களை தாக்கல் செய்யாததால் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பக்கூடாது என விஷால் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. தான் போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே நடிகர் விஷால் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஒப்பந்தத்தின் அசல் தங்களிடம் இல்லை என்று லைகா பதில் அளித்துள்ளது.

Tags

Next Story