நெல்லை - சென்னை இடையிலான கோடைகால சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள்

பயணிகளின் வசதிக்காக நெல்லை - சென்னை இடையே இயக்கப்படவுள்ள கோடைகால சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நெல்லை-சென்னை எழும்பூர் இடையே இரு மார்க்கமாகவும் மே மாதம் 23-ஆம் தேதி மற்றும் 24-ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் இயக்கப்பட உள்ள கோடைகால சிறப்பு ரயிலில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக இரண்டு குளிர்சாதன பெட்டியும், இரண்டு படுக்கைகளுடன் கூடிய பெட்டியும் இணைத்து இயக்கப்பட உள்ளதாகபயணிகளின் வசதிக்காக நெல்லை - சென்னை இடையே இயக்கப்படவுள்ள கோடைகால சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

குறிப்பாக, 23ஆம் தேதி நெல்லையிலிருந்து புறப்படும் இந்த ரயிலிலும், 24 ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை நோக்கி புறப்படும் இந்த ரயிலிலும் இந்த பெட்டிகள் இணைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story