பிரேமலதாவை சந்திக்கும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள்

அதிமுக - தேமுதிக இடையே தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.
அதிமுக மற்றும் தேமுதிக இடையே தொகுதி பங்கீடு குறித்து இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை இன்று நடைபெறுகிறது. கடந்த சில நாட்களாக முன்பாகவே அதிமுக தேமுதிக இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தங்கமணி அன்பழகன் பெஞ்சமின் ஆகியோர் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் இன்று கூட்டணி தொடர்பாக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

Tags

Next Story